சாகுல் ஹமீது மரணம் தொடர்பாக காவல்நிலைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - பொன் சந்திரன்

மேட்டுப்பாளையத்தில் போலீசார் விசாரணையின் போது சாகுல் ஹமீது என்பவர் உயிர்ழன்தது தொடர்பாக அக்காவல்நிலைய அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பி.யு.சி.எல்.மாநில இணை செயலாளர் பொன் சந்திரன் தெரிவித்துள்ளார்.

கோவை: மேட்டுப்பாளையத்தில் போலீசார் விசாரணையின் போது சாகுல் ஹமீது என்பவர் உயிர்ழன்தது தொடர்பாக அக்காவல்நிலைய அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பி.யு.சி.எல்.மாநில இணை செயலாளர் பொன் சந்திரன் தெரிவித்துள்ளார்.

மேட்டுப்பாளையத்தில் போலீசார் கஸ்டடியில் இருந்த சாகுல் ஹமீது என்பவர் உயிரிழந்தது தொடர்பாக தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் பி.யு.சி.எல்.மாநில இணை செயலாளர் பொன் சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், " சாகுல் சமீது மரணம்  தொடர்பாக உதவி ஆய்வாளர் பொன்ராஜ், காவல் நிலைய அதிகாரிகள் மீது பணி இடைநீக்கம் உட்பட துறை சார்ந்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சாகுல் அமீது குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். சாகுல் அமீதின் காவல் நிலைய இறப்பு வழக்கை குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 176 (1A) ன் கீழ் தனி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்த வேண்டும். பொதுமக்கள் பிடிக்க முற்பட்ட போது கீழே விழுந்ததில் ஏற்பட்ட காயத்தால் தான் சாகுல் அமீது உயிரிழப்பு நடந்ததாக காவல்துறை வழக்கை ஜோடிக்கிறது. அதற்காக பொதுமக்களை மிரட்டுவது, பாதிக்கப்பட்ட குடும்பத்திடம் பேரம் பேசுவது போன்ற நடவடிக்கைகளில் காவல்துறை ஈடுபடுகிறது.

இதுதொடர்பாக தற்போது நடைபெற்று வரும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியின் விசாரணை நம்பிக்கை அளிக்கிறது. இந்த வழக்கை சி.பி.ஐ., அல்லது சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட வேண்டும். தேசிய மனித உரிமை ஆணையமும் இந்த வழக்கை தொடர் கண்காணிப்பில் வைக்க வேண்டும். உதவி ஆய்வாளர் பொன்ராஜின் முந்தைய  செயல்பாடுகள் மதரீதியாகவும் இருப்பதாகச் சந்தேகம் எழுகிறது."இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...