காதலர் தினத்தை கேக் வெட்டிக் கொண்டாடிய கலப்புத்திருமணம் செய்த தம்பதிகள்

உலகம் முழுவதும் நாளை (பிப்.,14) காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், தந்தை பெரியார் திராவிட கழகத்தில் கலப்பு திருமணம் செய்தவர்கள் கேக் வெட்டிக் கொண்டாடினர்.

கோவை : உலகம் முழுவதும் நாளை (பிப்.,14) காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், தந்தை பெரியார் திராவிட கழகத்தில் கலப்பு திருமணம் செய்தவர்கள் கேக் வெட்டிக் கொண்டாடினர். 

காந்திபுரத்திலுள்ள தந்தை பெரியார் திராவிடர் கழகத்தில், கலப்பு திருமணம் செய்து கொண்டவர்கள் 18-ஆம் ஆண்டாக காதலர் தினத்தை கேக் வெட்டி குழந்தைகள் மற்றும் நண்பர்களோடு கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சிக்குப் பின்னர், தந்தை பெரியார் திராவிட கழகப் பொதுச்செயலாளர் கு. இராமகிருட்டிணன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கையில், காதலர் தினம் உலகம் முழுவதும் அனைத்து மக்களாலும் கொண்டாடப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் தான் சாதிய எண்ணம் கொண்ட மதவாதிகள் காதலர் தினத்தை எதிர்க்கிறார்கள். இதற்கு, சாதிய கட்டுமானங்கள், காதல் திருமணங்களால் தகர்ந்துவிடும் என்ற அச்சம்தான் காரணம். மேலும், இன்றைக்கு பெண்கள் ஆண்களுக்கு நிகராக அனைத்துப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஆணவக்கொலைக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் சட்டமியற்ற வேண்டும் என்று நீதிமன்றம் அருமையான தீர்ப்பை வழங்கியுள்ளது. சாதி, மத மறுப்பு செய்துகொண்டவர்களுக்கு எனத் தனி ஆணையம் அமைத்து, அவர்களது குழந்தைகளுக்கு சலுகைகள் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...