வனவிலங்குகள் மனித உயிர்கள் மோதல் தடுப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம்

வால்பாறையை அடுத்த அட்டக்கட்டியில் வனத்துறை பயிற்சி மையத்தில் வனவிலங்குகள் மனித உயிர்கள் மோதல் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கோவை : வால்பாறையை அடுத்த அட்டக்கட்டியில் வனத்துறை பயிற்சி மையத்தில் வனவிலங்குகள் மனித உயிர்கள் மோதல் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 



வால்பாறை தனியார் மற்றும் அரசு தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த பகுதியாகும். தேயிலைத் தோட்டங்களின் அருகாமையில் மானாம்பள்ளி வனச்சரகத்திற்கும், வால்பாறை வனச்சரகத்திற்கும் உட்பட்ட பல ஆயிரக்கணக்கான ஹெக்டேர் அளவில் அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. இந்த வனப்பகுதிக்குள் வனவிலங்குகள் யானை, சிறுத்தை, காட்டெருமை, கரடி, செந்நாய் போன்ற வனவிலங்குகள் அன்றாடம் இரை தேடி தேயிலைத் தோட்டங்களுக்கும், தொழிலாளர்கள் குடியிருப்புக்குள்ளும் நுழைவது வழக்கமாக உள்ளது. 

இந்நிலையில், வனவிலங்குகளால் மனித உயிரிழப்பு அடிக்கடி ஏற்படுகிறது.  மனித வனவிலங்குகள் மோதல் தடுப்பு குறித்து அட்டக்கட்டியில் வனத்துறை பயிற்சி மையத்தில் கூட்டம் நடைபெற்றது.

 

இக்கூட்டத்தில் பொள்ளாச்சி சார் ஆட்சியாளர் காயத்ரி கிருஷ்ணன் கூறுகையில், வால்பாறை தேயிலைத் தோட்டப்பகுதியில் தொழிலாளர்கள் குடியிருப்புகளுக்கு அருகாமையில் அடர்ந்த முட்செடிகளும் புதர்களும் உள்ளதால் உயிர்சேதங்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் அரசுக்குப் புகார் கொடுத்த வண்ணம் உள்ளனர். இதனால், எஸ்டேட் நிர்வாகங்கள், தொழிலாளர்கள் குடியிருப்புக்கு அருகாமையில் உள்ள முட்புதர்களை ஒரு வார காலத்திற்குள் அகற்ற வேண்டும். ரேசன் கடைகளை யானைகள் சேதப்படுத்தாமல் பாதுகாப்பான நிலையில் இருக்க உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும். எஸ்டேட் பகுதிகளில் திறந்த வெளியில் இறைச்சி கழிவுகளை கொட்டாமல் ஆழமான குழிகள் தோண்டி, அதில் கொட்டப்படுவதால் குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தைகளின் ஊடுருவலைத் தடுக்கலாம். என்றார். 

தமிழ்நாடு வனப்பாதுகாவலர் கூறுகையில்:- அனைத்து எஸ்டேட் பகுதிகளிலும் வனவிலங்குகள் தொழிலாளர்கள் குடியிருப்பு அருகாமையில் நடமாடுவது குறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கலாம் என அறிவுறுத்தப்பட்டது. அதுமட்டுமல்லாமல், தொழிலாளர்களின் குடியிருப்புக்கும், தேயிலைத் தோட்டங்களுக்கும் இடையே சுமார் 20 அடி தூரமாவது இருக்க வேண்டும். ஆனால், தற்போது குடியிருப்பிலிருந்து 10 அடி தூரத்திலேயே தேயிலைத் தோட்டம் அமைந்துள்ளது. இதனால், வனவிலங்குகள் மிக எளிதாக தேயிலைத் தோட்டங்களில் இருந்து குடியிருப்புக்குள் நுழைந்து விடுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில், வால்பாறை காவல்துறை கண்காணிப்பாளர் சுப்பிரமணியம், வனச்சரக அலுவலர்கள் சக்திவேல் மற்றும் சேகர், கிருஷ்ணசாமி, வால்பாறை வட்டாட்சியர் குணசேகரன், ஓய்வு பெற்ற வன அலுவலர் தங்கராஜ், வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள் கணேஷ், ஆனந்த் மற்றும் எஸ்டேட் மேலாளர்களும் வனத்துறை பயிற்சி மைய மாணவி நித்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...