''மாநிலங்களுக்கு நிதி வழங்காமல், மத்திய அரசு அல்வா கொடுக்கிறது''

மாநில அரசுகளுக்கு தேவையான நிதியை வழங்காமல், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அல்வாதான் கொடுப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

கோவை : மாநில அரசுகளுக்கு தேவையான நிதியை வழங்காமல், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அல்வாதான் கொடுப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.  

ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரி நிகழ்ச்சியில் பங்கேற்க கோவை வந்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கோவை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் பேசுகையில், ''தமிழக சட்டசபையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உருவப் படம் தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி தெரிவித்துள்ள கருத்து அவரது தனிப்பட்ட கருத்தாகும். இது குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்க தான் விரும்பவில்லை. மேலும், இவ்விவகாரத்தில் கட்சியின் கருத்தே எனது கருத்து. 

மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு மத்திய அரசிடம் கோரினால், புதுச்சேரிக்கு நிதி வழங்குவதில் பாரபட்சம் காட்டுகிறது. இருப்பினும், புதுச்சேரியில் முறையான நலத்திட்டங்களை மேற்கொண்டு வரப்பட்டு வருகிறது. மத்திய அரசிடம் நிதி கோரினால் எங்களுக்கு நிதி கொடுக்காமல் பிரதமர் மோடி அல்வாதான் கொடுக்கிறது. வேலையின்மை தொடர்பாக கேள்வி எழுப்பினால், பாரத பிரதமர் பக்கோடா விற்கச் சொல்வது நியாயமா..?.'' என்றார்.  

வரும் 24 ஆம் தேதி புதுச்சேரிக்கு பிரதமர் வருகை புரியவுள்ளதாக கூறிய முதலமைச்சர் நாராயணசாமி துணைநிலை ஆளுநரிடம் சுமூகமான உறவையே மேற்கொள்ள தங்கள் கட்சி நினைப்பதாகக் கூறினார். பின்னர் சாலை மார்க்கமாக ஈஷா யோக மையத்திற்கு சென்றார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...