உலக சாதனை பட்டியலில் இடம்பிடித்த 1,10,008 சிவலிங்க சிறப்பு வழிபாடு

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மகாசிவராத்திரியை முன்னிட்டு 1 லட்சத்து 10 ஆயிரத்து எட்டு சிவலிங்கங்களை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தியது உலக சாதனை பதிவில் இடம்பிடித்துள்ளது.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மகாசிவராத்திரியை முன்னிட்டு 1 லட்சத்து 10 ஆயிரத்து எட்டு சிவலிங்கங்களை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தியது உலக சாதனை பதிவில் இடம்பிடித்துள்ளது.  



தாராபுரம் வாசவி மஹாலில் மகாசிவராத்திரி விழாவையொட்டி பெண்கள் அரிசிமாவு ,சந்தனம் ஆகியவற்றை கொண்டு மூன்று மாதங்களாக தயாரித்த 1 லட்சத்து 10 ஆயிரத்து எட்டு சிவலிங்கங்களை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். சிவராத்திரி அன்று சிவலிங்கத்தை தரிசனம் செய்தால்  புண்ணியம் உண்டாகும் என முன்னோர்கள் கூறியிருக்கும் நிலையில், அனைத்து மக்களும் ஒரே நேரத்தில் 1 லட்சத்து 10 ஆயிரத்து எட்டு சிவலிங்கங்களை தரிசனம் செய்தனர். அனைத்து நலங்களையும் பெறவேண்டும் என்பதற்காக நடத்தபட்ட இந்த வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிவ வழிபாடு செய்தனர்.

மேலும், 1 லட்சத்து 10 ஆயிரத்து எட்டு சிவலிங்கங்களை கொண்டு அமைக்கப்பட்ட மிகப்பெரிய சிவலிங்கத்தின் தோற்றத்தை வோர்ல்ட் ரெக்கார்ட் அமைப்பினர் பார்வையிட்டனர். இதை உலக சாதனை பட்டியலில் சேர்த்து, அதற்கான விருதினை சிவலிங்கங்கள் செய்த பெண்களுக்கு வழங்கி பாராட்டு தெரிவித்தனர். உலக சாதனை பெற்ற சிவலிங்கத்தை காண ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...