சேஞ்ச் அறக்கட்டளையுடன் இணைந்து கோவை அரசு மருத்துவமனையை சுத்தப்படுத்திய கல்லூரி மாணவர்கள்

காதலர் தினத்தை முன்னிட்டு பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஒன்றிணைந்து கோவை அரசு மருத்துவமனையை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.



கோவை: காதலர் தினத்தை முன்னிட்டு பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஒன்றிணைந்து கோவை அரசு மருத்துவமனையை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். 

சேஞ்ச் டிரஸ்ட் (Change trust) மற்றும் ரோட்டரி மெட்ரோ பாலிஸ் (Rotary Metro polis) சார்பாக கோவை அரசு மருத்துவமனையை தூய்மைப்படுத்துதல், ரத்த தானம் வழங்குதல் மற்றும் மரக் கன்றுகள் நடவு செய்தல் ஆகிய பணிகளில் பல்வேறு கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டனர். காதலர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இதில் அரசு மருத்துவமனை முதல்வர் டாக்டர் அசோகன், இருப்பிட மருத்துவர் சவுந்தரவேல், கோவை மாநகராட்சி ஆணையர் விஜய கார்த்திகேயன் மற்றும் மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.



நிகழ்ச்சியில் விஜய கார்த்திகேயன் பேசுகையில், "மாணவர்கள் தூய்மை பணியில் ஈடுபடுவது மகிழ்ச்சியளிக்கிறது. மாணவர்கள் இதோடு சேவையை நிறுத்திவிடக்கூடாது. 



நோயாளிகளுக்கு உதவும் வண்ணம் தொழில்நுட்ப ரீதியாக பல புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க வேண்டும். இதற்கு முன் உதாரணமாக ரத்தம் தானம் தேவைப்படுபவர்களுக்காக ரத்த தான செயலி ஒன்றை கோவை மாநகராட்சி சார்பில் உருவாக்க உள்ளோம்," என்றார்.

சேஞ்ச் டிரஸ்ட் நிறுவனர் தஸ்லிமா நஸ்ரின் கூறுகையில், "மாணவர்களை சேவை செய்யும் பணிகளில் ஈடுபடுத்துவது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் வருங்காலங்களில் அவர்கள் அரசு அதிகாரிகளாக வரும் போது மக்களுக்கு சேவை செய்யும் எண்ணம் மாணவர்களிடத்தில் உருவாகும்," என்றார்.



நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ரோட்டரி மெட்ரோபாலிஸ் சார்பாக அரசு மருத்துவமனைக்கு 500 படுக்கை விரிப்புகளும், 70 குப்பைக் கூடைகளும் வழங்கப்பட்டன.

Newsletter

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...