மூதாட்டியிடம் செயின் பறித்த வாலிபர் கைது

திருப்பூரில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் கத்தி முனையில் 7 சவரன் நகையை பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர்: திருப்பூரில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் கத்தி முனையில் 7 சவரன் நகையை பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கருவம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அருக்காணியம்மாள். இந்த மூதாட்டி தனது மகன் குடும்பத்தாருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று காலை வழக்கம் போல் அனைவரும் வேலைக்கு சென்று விட வீட்டில் அவர் மட்டும் தனியாக இருந்தார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து தனியாக இருந்த மூதாட்டியிடம் கத்தியை காட்டி மிரட்டியதோடு அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்றார். 

இது தொடர்பாக, திருப்பூர் மத்திய காவல் நிலையத்தில்  புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அருகிலிருந்த நிறுவனங்களில் பொருத்தபட்டிருந்த கண்காணிப்புக் காமிராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினர்.  மேலும், பேருந்து நிலையங்களில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித் திரியும் நபர்களை கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில், நேற்று இரவு புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அடகு கடையில் கோவையைச் சேர்ந்த நந்தகுமார் என்ற வாலிபர் செயினை அடகு வைக்க வந்தார். அவரைப் பிடித்து விசாரணை நடத்தியதில் மூதாட்டியிடம் நகை பறித்ததை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையிலடைத்தனர். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...