ஊருக்குள் புகுந்த காட்டெருமை: விரட்டும் பணியில் வனத்துறை

அன்னூர் அருகே ஊருக்குள் புகுந்த காட்டெருமையை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கோவை: அன்னூர் அருகே ஊருக்குள் புகுந்த காட்டெருமையை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் ஏராளமான யானைகள், சிறுத்தைகள், காட்டெருமைகள் உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன.

இவற்றில் நாள் தோறும் உணவு, தண்ணீர் தேடி ஊருக்குள் யானை புகுந்து பொதுமக்களை அச்சுறுத்துவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், புதன்கிழமை காலை மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் அன்னூர் அருகே உள்ள  வரதயாம்பாளையத்தில் என்ற கிராமத்தில் காட்டெருமை ஒன்று புகுந்தது. 

இதனைப் பார்த்த கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அங்கு சென்ற பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் ஊருக்குள் புகுந்துள்ள காட்டெருமையை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



ஆனால், அந்த காட்டெருமை வனப்பகுதிக்குள் செல்லாமல் கிராம பகுதியில் சுற்றி வருகிறது. 

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "யானைகள் உணவு, தண்ணீர் தேடி ஊருக்குள் வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது மலையில் இருந்து 25 கிலோமீட்டர் தூரம் உள்ள கிராமத்திற்கும் காட்டெருமை புகுந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

காட்டுக்குள் உணவு இல்லாததால் காட்டெருமை ஊருக்குள் வந்திருக்கலாம். வன விலங்குகள் காட்டில் இருந்து வெளி வராமல் இருக்கும் வகையில் வன எல்லையிலேயே தேவையான உணவு, தண்ணீர் தொட்டிகளை வனத்துறையினர் அமைக்க வேண்டும்" என வலியுறுத்தினர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...