நகை பறிப்பு கொள்ளையர்கள் குறித்த சி.சி.டி.வி. காட்சிகள் வெளியீடு

மாநகரில் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் குறித்த சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர்.


கோவை: மாநகரில் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் குறித்த சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர்.



கோவை மாநகரை குற்றமில்லா நகரமாக மாற்ற காவல்துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்து சிறையிலடைக்கும் பணியில் மும்முரம் காட்டி வருகின்றனர் கோவை மாநகர போலீசார்.



இந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக ராமநாதபுரம், போத்தனூர், சுந்தராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறி வைத்து செயின் பறித்து சென்றவர்களை கண்காணிப்பு காமிராக்களில் பதிவான காட்சிகள் மூலம் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.



அந்த காட்சியில், இரு சக்கர வாகனத்தில் வரும் இரண்டு வாலிபர்கள் சாலையில் நடந்து செல்லும் பெண்ணிடம் நகையை பறித்து செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் இடம் பெற்றுள்ள நபர்கள் குறித்து விபரம் தெரிந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...