சுற்றுலா பயணிகளால் கண்டுகொள்ளப்படாத உதகை மரவியல் பூங்கா

பராமரிக்கப்பட்ட உதகை மரவியல் பூங்கா தொடர்பாக முறையான விழிப்புணர்வு இல்லாததால், அதனை சுற்றுலா பயணிகள் கண்டுகொள்ளாத நிலை ஏற்பட்டுள்ளது.

உதகை : பராமரிக்கப்பட்ட உதகை மரவியல் பூங்கா தொடர்பாக முறையான விழிப்புணர்வு இல்லாததால், அதனை சுற்றுலா பயணிகள் கண்டுகொள்ளாத நிலை ஏற்பட்டுள்ளது.



சுற்றுலா நகரம் என்றழைக்கப்படும் உதகையில் பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. குறிப்பாக, அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்களில் மலர்களைக் காணவே அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு மாறுதல் ஏற்படுத்தும் வகையில், படகு இல்ல மறுகரையில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் கடந்த 1982-ம் ஆண்டு பல்வேறு வகையான குளிர்பிரதேசங்களில் இருந்து 60 வகையான அரிய மரக்கன்றுகளை நடவு செய்யப்பட்டது. காலப்போக்கில் போதிய வேலிகள் இல்லாததால் பராமரிக்கப்படாமல் இருந்தது.



இதனையடுத்து, மீண்டும் இப்பூங்காவை பொலிவுபடுத்தும் வகையில், கடந்த 2007-ம் ஆண்டு சிறப்பு மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ் சுமார் 14 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இப்பூங்கா அழகான, அமைதியான, சுற்றுச்சூழல் சிறிதும் மாசுபடாமல் இருந்து வருகிறது. எனவே, உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு தெரியப்படுத்தும் வகையில் விளம்பரங்களைச் செய்தால் இப்பூங்காவின் அழகு அனைவராலும் ஆதரிக்கப்படும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...