"முதலமைச்சர் பழனிசாமி ஆட்சியில் தமிழகத்திற்கு அனைத்துத் துறைகளிலும் பின்னடைவு''

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஒராண்டு ஆட்சியில் தமிழகம் அனைத்துத் துறைகளிலும் பின்தங்கி விட்டதாக தே.மு.தி.க., பொதுச்செயலாளர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.


கோவை : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஒராண்டு ஆட்சியில் தமிழகம் அனைத்துத் துறைகளிலும் பின்தங்கி விட்டதாக தே.மு.தி.க., பொதுச்செயலாளர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எடப்பாடி பழனிசாமியின் ஒராண்டு ஆட்சியில் தமிழகம் அனைத்து துறைகளிலும் பின்தங்கிவிட்டது. தமிழகம் ரூ. 5 லட்சம் கோடி கடன் உள்ளது. எடப்பாடி பழனிசாமி ஆட்சி மீது மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். இந்த ஒராண்டு ஆட்சி குறித்து சொல்ல ஒன்றும் இல்லை. கடந்த தேர்தலில் விஜயகாந்த்தை முதலமைச்சராக்குவோம் எனக் கூறிய வைகோ, தற்போது ஸ்டாலினை முதலமைச்சராக்குவதே தனது நோக்கம் எனக்கூறியிருப்பது தொடர்பாக நீங்கள் வைகோவிடம் தான் கேட்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

மேலும், தமிழகம் பெரியார் மண்ணல்ல, பெரியாழ்வார் மண் என பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை கூறியிருப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த பிரேமலதா விஜயகாந்த், ஒவ்வொருவர் கருத்திற்கும் பதில் சொல்ல முடியாது என்றும், மதத்தால் யார் மனதையும் புண்படுத்தக்கூடாது என்பதே தே.மு.தி.க.,வின் நிலைப்பாடு என்றார். ஆட்சியாளர்கள் ஊழல் செய்து சுமையை மக்கள் மீது திணிப்பதாகவும், இதனால் நாடும், மக்களும் கடனில் உள்ளதாக அவர் கூறினார். 

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...