மலேசியாவில் நடந்த யோகா போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த கோவை மாணவி

கடந்த மாதம் மலேசியாவில் நடைபெற்ற 6-வது சர்வதேச யோகா போட்டியில் இந்தியா சார்பாக கலந்துகொண்ட கோவையைச் சேர்ந்த மாணவி வைஷ்ணவி தங்கம் பதக்கம் வென்றுள்ளார்.

கோவை : கடந்த மாதம் மலேசியாவில் நடைபெற்ற 6-வது சர்வதேச யோகா போட்டியில் இந்தியா சார்பாக கலந்துகொண்ட கோவையைச் சேர்ந்த மாணவி வைஷ்ணவி தங்கம் பதக்கம் வென்றுள்ளார்.



ஜனவரி மாதம் நடைபெற்ற இப்போட்டியில் ஆசியா கண்டத்தை சேர்ந்த இந்திய, மலேசியா, சிங்கப்பூர், இண்டொனேசியா, ஹாங்காங், ரசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளை சார்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டுள்ளனர். அதில் 15 வயதுக்குட்பட்ட பிரிவில் 

கோவை அடுத்த சோமனூர் பகுதியை சார்ந்த தனியார் பள்ளி மாணவி வைஷ்ணவி (14), கலந்துகொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி தங்கம் பதக்கம் வென்றுள்ளார்.

இதேபோன்று 2015 மற்றும் 2016-ம் ஆண்டு சர்வதேச அளவில் தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற யோகா போட்டிகளில் கலந்துகொண்டு சாம்பியன் ஆப் யோகா, ஒவர் ஆல் கோல்டு போன்ற பதங்கங்களையும் வென்றுள்ளார். அதேபோல, மாவட்டம், மாநிலம், தேசிய அளவில் நடைபெற்ற போட்டிகளில் வென்று பலநூறு பதக்கங்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



இது குறித்து வைஷ்ணவி கூறுகையில், "9 வயது முதல் யோகா செய்து வருகிறேன். பள்ளிக்கூடத்தில் விளையாட்டு பிரிவில் யோகா பயில ஆரம்பித்தேன். பின்னர், அது பிடித்துப்போய் முழுவதுமாக யோகா போட்டிகளில் மாவட்டம், மாநிலம், தேசம், சர்வேதேசம் என கலந்துகொள்ள ஆரம்பித்தேன். படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லை. ஒவ்வொரு மாணவரின் தனிதிறமையும் ஊக்குவிக்கப்பட்டு, அதற்கான முயற்சிகளை எடுத்தால் அனைவரும் வெற்றியடைய முடியும். எனது இந்த முயற்சிக்கு என் பெற்றோர் மற்றும் பள்ளி நீர்வாகம் முழு ஒத்துழைப்பு அளிக்கிறது, " என்றார்.

தனியார் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வரும் வைஷ்ணவியின் தந்தை சரவணக்குமார் கூறுகையில், "திறமைசாலிகள் மதிக்கப்பட வேண்டும்.படித்தால் வாழ்க்கையில் முன்னரே மட்டும்தான் முடியும். ஆனால் திறமைகளை வெளிப்படுத்தி அதில் வெற்றியடைந்தால் மட்டுமே இந்த உலகம் நம்மலை திரும்பி பார்க்கும். திறமை உள்ள மாணவர்களை அவர்களது பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும்,"என்றார்.

வைஷ்ணவி சர்வதேச அளவில் போட்டிகளில் பங்கேற்க அவரது பள்ளியான பார்க் குளோபல் மிகவும் உறுதுனையாக உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...