தனியார் பேருந்து நடந்துனரின் உரிமம் தற்காலிகமாக ரத்து..!

மேட்டுப்பாளையத்தில் பயணி ஒருவரிடம் முறைகேடாக நடந்து கொண்ட தனியார் பேருந்து நடத்துனரின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் உத்தரவிட்டார்.



கோவை: மேட்டுப்பாளையத்தில் பயணி ஒருவரிடம் முறைகேடாக நடந்து கொண்ட தனியார் பேருந்து நடத்துனரின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் உத்தரவிட்டார்.

கோவை முதல் மேட்டுப்பாளையம் வரை செல்லும் தனியார் பேருந்து ஓட்டுநர் சரவணக்குமார் மற்றும் நடத்துநர் சேக்பரீத் மீது பயணி ஜெயக்குமார் கொடுத்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் கடந்த பிப்ரவரி 5-ம் தேதி வழக்கு பதிவு செய்தனர். 

இந்த புகார் மேட்டுப்பாளையம் வட்டாரா போக்குவரத்து அலுவலரிடமும் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன், நடத்துநர் சேக்பரீத் மீது கொடுக்கப்பட்ட புகார் உண்மை என உறுதி செய்தார்.

இதனிடையே மோட்டார் வாகன சட்டம்( 34) பிரிவு 1- ன் படி நடந்துநர் சேக்பரீதின் நடந்துநர் உரிமம் தற்காலிகமாக ஒரு மாத காலத்திற்க்கு (12-2-2018)முதல் (13-3-2018) வரை ரத்து செய்யப்படுவதாக வட்டாரா போக்குவரத்து அலுவலர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த சனிக்கிழமை (3.2.2018 ) மதியம் மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்து வரும் பேராசிரியர் எம். ஜெயக்குமார் (SB_டிரான்ஸ்போர்ட் TN 66 F 5271) பயணம் செய்தபோது டிக்கெட் வாங்கியது போக மீத தொகை 25 ரூபாயை மூன்று முறை கேட்டும் தராமல் இழுத்தடித்ததோடு, மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் சென்றடையும் வரை தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...