மர்ம காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி உயிரிழப்பு

மேட்டுப்பாளையம் பகுதியில் மர்ம காய்ச்சலுக்கு உள்ளாகி 6-வயது சிறுமி பரிதாபமாக பலியானார்.

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் பகுதியில் மர்ம காய்ச்சலுக்கு உள்ளாகி 6-வயது சிறுமி பரிதாபமாக பலியானார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளைத்தில் உள்ள சங்கர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் கார்த்திகா-அர்ஜூனன் தம்பதியினர். இவர்களுக்கு அகிலாண்டேஸ்வரி (6) என்ற பெண் குழந்தை இருந்தார். இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த ஒருவாரமாக சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்டது. தொடர்ந்து, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மருத்துவமனைக்கு வரக்கூறி சிகிச்சை அளித்து வந்தனர். காய்ச்சல் அதிகமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக நேற்று கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்ற நிலோயில் நேற்று மாலை திடீரென உயிரிழந்தார்.



"சிறுமி உயிரிழப்புக்கு தங்கள் பகுதியில் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேடே காரணம்" என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், இனியாவது நகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டாமல் உரிய சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...