நமது உடலில் ஏற்படும் மரபு மாற்றங்கள் மூலம் புற்றுநோய் வருகிறது - நல்ல. ஜி.பழனிச்சாமி

நமது உடலில் ஏற்படும் மரபு மாற்றங்கள் மூலம் புற்றுநோய் வருவதாக கே.எம்.சிஎச். மருத்துவமனையின் தலைவர் நல்ல. ஜி.பழனிச்சாமி கூறியுள்ளார்.


கோவை: நமது உடலில் ஏற்படும் மரபு மாற்றங்கள் மூலம் புற்றுநோய் வருவதாக கே.எம்.சிஎச். மருத்துவமனையின் தலைவர் நல்ல. ஜி.பழனிச்சாமி கூறியுள்ளார். 

கே.எம்.சிஎச். மருத்துவமனையில் மெட்ஜினோம் மரபியல் ஆய்வு மையம் தொடங்கப்பட்டுள்ளது. நோயின் உயிரியல் தன்மை குறித்து ஆராய்ச்சி செய்ய உதவும் வகையிலும், நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க துல்லியமான தகவல்களை அளிக்கும் இந்த மையத்தினை கே.எம்.சிஎச். மருத்துவமனையின் தலைவர் நல்ல பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்தார்.



தொடர்ந்து அவர் பேசுகையில், " கே.எம்.சிஎச். மருத்துவமனை கோவை மக்களுக்கு தரமான சிகிச்சை வழங்குவதில் முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறது. இன்றைய காலகட்டத்தில் மரபணு மாற்றத்தால் புற்றுநோய் ஏற்பட்டு வருகிறது. இவ்வகை நோய்களை மரபியல் மையம் மூலம் சிகிச்சையளிக்கவும், தடுக்கவும் முடியும். இந்த மேம்பட்ட மையத்தில் மரபணு மரபணு அடிப்படையிலான தீர்வுகளை எங்கள் சிறந்த மருத்துவக்குழு வழங்கும்." என்றார்.

மெட்ஜினோம் மரபியல் ஆய்வு மையத்தின் தலைவர் சியாம் சந்தோஷ் பேசுகையில், " இந்த மையம் நவீன தொழில் நுட்பத்துடன் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க உதவிகரமாக இருக்கும். இந்த துறையில் மேலும் பல ஆராய்ச்சிகள் மூலம் பல்வேறு நோய்களுக்கு தீர்வுக்கான நாங்கள் முயற்சி மேற்கொண்டு வருகிறோம்." என்றார்.



"நோய்கள் குறைவான சமுதாயத்தை உருவாகுவது எங்கள் மருத்துவமனைக்கு முக்கிய நோக்கம். இந்த மையம் கர்ப்ப காலத்தில் குழந்தையின் குறைபாடுகளை கண்டுபிடிக்க உதவும்" என்று மெட்ஜினோம் மரபியல் ஆய்வு மைய மருத்துவர் கிருஷ்ண சாமிநாதன் தெரிவித்தார். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...