கல்லூரி மாணவர் தற்கொலை : உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

கோவையில் தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிய உறவினர்கள் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

கோவை: கோவையில் தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிய உறவினர்கள் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

மலுமச்சம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஆட்டோ மொபைல் இரண்டாமாண்டு பயின்று வந்தவர் பிரேம்குமார். சூளகிரி பகுதியை சேர்ந்த இவர் நேற்று கல்லூரி விடுதி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் , மாணவனின் மரணத்தில் மர்மம் இருப்பதாக செட்டிபாளையம் காவல்நிலையத்தில் அவரது தந்தை விஸ்வநாதன் புகார் அளித்தார்.

இது குறித்து மாணவர் குறித்து அவரது மாமா ரமேஷ் கூறுகையில், " பிரேம்குமார் இதுவரை எந்த பிரச்சனை குறித்தும் வீட்டிற்கு தெரியப்படுத்தியதில்லை. அவர் நன்றாகப் படிக்கும் மாணவர். கல்லூரி வீடு என்று சுற்றுவட்டாரங்களில் நற்பெயரை கொண்டவர். 

கல்லூரி நிர்வாகம் பிரேமின் மரணம் தொடர்பாக முன்னுக்குப் பின் முரணாக பதில் தருகிறது. அந்த கல்லூரி வளாகத்தில் கண்காணிப்பு காமிரா இல்லை" என்றார்.

இந்த நிலையில் மாணவரின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். தொடர்ந்து அவர்களுடன் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட மாணவனின் உடலை பெற்றுச் சென்றனர்.

இது தொடர்பாக செட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...