எடப்பாடி அரசு விரைவில் வீட்டிற்குச் செல்லும் - ஜவாஹிருல்லா

தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு, நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்சினைகளை கண்டு கொள்ளாத எடப்பாடி அரசு விரைவில் வீட்டிற்கு செல்லும் என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு, நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்சினைகளை கண்டு கொள்ளாத எடப்பாடி அரசு விரைவில் வீட்டிற்கு செல்லும் என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார். 



இது தொடர்பாக உதகையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், " தமிழகத்தில் பயங்கரவாதிகளின் நடவடிக்கை அதிகரித்து வருவதாகவும் தமிழ் உணர்வாளர்கள் மற்றும் முஸ்லீம்கள் சட்ட ஒழுங்குக்கு பிரச்சினை ஏற்படுத்தி வருவதாகவும் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இது மத்திய இணை அமைச்சருக்கு சரியான நிலைப்பாடு இல்லை. தமிழகத்தில் கொள்வதற்காக மக்களிடையே பிளவை ஏற்படுத்தி அதில் அரசியல் லாபம் பெறலாம் என்பது தான் பா.ஜ.க வின் திட்டம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை உள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கணபதி கைது செய்யப்பட்டது தமிழகத்தில் உயர்கல்வித் துறை லஞ்சமயமாகி வருவதை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக தமிழகத்தில் பல்வேறு பல்கலைக்கழக துணைவேந்தர்களின் நியமனம் தொடர்பான அனைத்து விஷயங்களையும் விசாரிக்க வேண்டும்.

தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு, நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்சினைகளை கண்டு கொள்ளாத எடப்பாடி அரசு விரைவில் வீட்டிற்கு செல்லும். ஜன நாயக முறைப்படி தேர்தல் நடைபெற்று மக்கள் விரும்பும் அரசு அமையும்.

நடிகர் கமலஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் திரைப்படங்களில் சிறந்த நடிகர்கள் அதே போல அரசியல் களத்திலும் நல்ல நடிகர்கள் என்று தான் பார்க்கிறேன். தமிழகத்தில் ஏராளமான பிரச்சினைகள் இருந்த போதெல்லாம் இவர்கள் மவுனம் சாதித்தனர். தற்போது இவர்கள் அரசியல் பக்கம் திரும்புவது ய நலத்திற்காகத் தான். மற்ற கட்சிகளை குறித்து விமர்சிப்பதற்கு கமலஹாசன் எந்த ஒரு தகுதியும் இல்லை." என்று அவர் கூறினார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...