கோவையில் கத்தியை காட்டி மிரட்டி நகை, பணம் கொள்ளை

குனியமுத்தூர் பகுதியில் இன்று அதிகாலை அடுத்தடுத்து இருந்த வீடுகளுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி 19 சவரன் நகை மற்றும் ரூ.25 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: குனியமுத்தூர் பகுதியில் இன்று அதிகாலை அடுத்தடுத்து இருந்த வீடுகளுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி 19 சவரன் நகை மற்றும் ரூ.25 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



குனியமுத்தூர் கஸ்தூரி காடர்ன் பகுதியைச் சேர்ந்தவர் சேக் அப்துல்லா (37). இன்று அதிகாலை இவர் வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டிற்குள் திடீரென அரை நிர்வாணத்தில் புகுந்த மூன்று மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். 

மேலும், அப்துல்லாவின் மனைவி அணிந்திருந்த நகை, பீரோவில் வைத்திருந்த 17 சவரன் நகை மற்றும் ரூ.25 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். அதே போல் அருகே உள்ள பாஷா (46) என்பவரது வீட்டிற்குள் புகுந்த மூன்று பேர் அவரது சகோதரி அணிந்திருந்த 2 சவரன் நகையையும் மிரட்டிப் பறித்து தப்பிச் சென்றனர். 



இது தொடர்பாக, தகவலறிந்த மாநகர காவல்துறை துணை ஆணையர் லட்சுமி மற்றும் உதவி ஆணையர் ரமேஷ் கிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு நடத்தியதோடு, கொள்ளையர்கள் விட்டுச் சென்ற இரு சக்கர வாகனம் மற்றும் செல்போனை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியில் கொள்ளையர்கள் புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி கொள்ளையடித்த சம்பவம் கோவை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதே பகுதியில் தான் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...