கோடநாடு காவலாளி கொலை வழக்கு மார்ச் 1-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கு மார்ச் 1-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

நீலகிரி : முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கு மார்ச் 1-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.



நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் உள்ள கோடநாட்டில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா மற்றும் தேயிலை எஸ்டேட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலாளி மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக, கேரளாவைச் சேர்ந்த சந்தோஷ், தீபு, சதீசன், உதயகுமார், ஜிஜின் ஜாய், ஜம்சீர் அலி, வாளையாறு மனோஜ், மனோஜ் சமி மற்றும் குட்டி என்கிற பிஜின் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். 

இந்த வழக்கு கோத்தகிரி நீதிமன்றத்திலிருந்து மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. உதகை மாவட்ட நீதிமன்றத்தில் இருமுறை ஒத்தி வைக்கப்பட்ட இந்த வழக்கு விசாரணை இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி பி.வடமலை, விசாரணையை மார்ச் 1-ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாகவும், அன்றைய தினம் அனைவரும் ஆஜராகும்படி உத்தரவிட்டார். இன்றைய வழக்கு விசாரணையின் போது, 5 பேர் மட்டுமே ஆஜராயிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...