மகளை மீட்டுத் தாருங்கள்..! : பெற்றோர் கண்ணீர் புகார்


திருப்பூர் : திருமணம் செய்து கொண்டு வங்கதேசத்தில் வசிக்கும் தனது மகளை மீட்டுத் தருமாறு அந்த பெண்ணின் பெற்றோர் திருப்பூர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். 

திருப்பூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் உலகநாதன் இவரது மனைவி செல்வ கோமதி. இவர்களுக்கு பூா்ணா தேவி (19) என்ற மகள் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் ரிமுஷேக் என்ற வாலிபரை திருமணம் செய்து கொண்டு வங்கதேசம் சென்றதாகக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில், மகள் தங்களிடம் பேசுவதில்லை என்று கூறியும், அவரை மீட்டுத்தர் வேண்டியும் உலகநாதன்-செல்வ கோமதி தம்பதியினர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். 

அதில், " எங்கள் மகளான பூா்ணாதேவி கடந்த 2016-ம் ஆண்டு ரிமுஷேக் என்கிற இஸ்லாமியருடன் காதல் ஏற்பட்டு, இருவரும் திருமணம் செய்து கொண்டு வங்கதேசத்தில் வசித்து வந்தனர்.  திருமணம்  முடிந்த பின்னும் வாரந்தோறும் பூா்ணாதேவி எங்களுடன் பேசி வந்தார். இந்த நிலையில், கடந்த எங்களைத் தொடர்பு கொண்ட ரிமுஷேக் பூா்ணாதேவி உடல்நிலை சரியில்லாத காரணமாக இறந்து விட்டதாக கூறினார். இந்நிலையில், ரிமுஷேக்கை பற்றி விசாரித்தபோது லவ்ஜிகாத் அமைப்பைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. எனது மகளை தவறான நோக்கத்துடன் கடத்தி சென்று தீவிரவாத செயலுக்காக  பயன்படுத்தப்பட்டுள்ளதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எங்கள் மகளின் தற்போதைய நிலையை அறிந்து, எங்களிடம் மீட்டுத் தர வேண்டும்" இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...