ரயில்வேத்துறையில் டிரேக்மேனுக்கு அதிநவீன உபகரணங்கள் வழங்க முடிவு

ரயில் தண்டவாளங்களை ஆய்வு செய்யும் டிரேக்மேனுக்கு, ரயில் வருவதை முன்கூட்டிய அறியும் விதமாக, அதிநவீன உபகரணங்களை வழங்க ரயில்வேத்துறை முடிவு செய்துள்ளது.

ரயில் தண்டவாளங்களை ஆய்வு செய்யும் டிரேக்மேனுக்கு, ரயில் வருவதை முன்கூட்டிய அறியும் விதமாக, அதிநவீன உபகரணங்களை வழங்க ரயில்வேத்துறை முடிவு செய்துள்ளது. 

நாடு முழுவதும் ரயில்துறை மேம்பாட்டிற்காக மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக, பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்கப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ரயில்வே துறை சார்ந்த அதிகாரிகளின் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. அதில், ரயில் தண்டவாளங்களை ஆய்வு செய்யும் டிரேக்மேன், ரயில் வருவதை அறிய முடியாமல் படும் இன்னல்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. முடிவில்,  டிரேக்மேன்களுக்கு ரயில் வருவதை முன்கூட்டிய அறியும் விதமாக, அதிநவீன உபகரணங்களை வழங்க ரயில்வேத்துறை முடிவு செய்துள்ளது. 

அதாவது, ரக்ஷாக் எனப்படும் வாக்கி - டாக்கிகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், அதிர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எல்.இ.டி.யின் மூலம் தகவலின் பேரில், தண்டவாளத்தில் இருந்து டிரேக்மேன்கள் விலகிச் செல்ல முடியும். மேலும், பிரத்யேக காலணிகள், கையுறைகள், ரெயின் கோட் (rain coat), குளிர் ஜாக்கெட் மற்றும் பல உபகரணங்களை வழங்க ரயில்வே நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

இந்த ரக்ஷாக் கருவியானது தெற்கு மத்திய ரயில்வேயில் அறிமுகப்படுத்தப்பட்டு, நடைமுறையில் உள்ளது. 

இதனிடையே, 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரையின் பேரில் ஆடை பராமரிப்புகளுக்காக டிரேக்மேனுக்கு ஆண்டுதோறும் ரூ. 5 ஆயிரம் வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...