சாலை விபத்தில் இளைஞர்கள் பலி

மேட்டுப்பாளையம் அருகே தனியார் பேருந்து, இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.



மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே தனியார் பேருந்து, இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காந்திநகர் பகுதியை சேர்ந்த ரங்கசாமி என்பவரின் மகன் தமிழரசன் (29). இவருக்கு நேற்று பிறந்த நாள் என்பதால் தனது நண்பரான பினேஸ் (28) என்பவருடன் வெளியில் சென்றுவிட்டு நள்ளிரவு மேட்டுப்பாளையத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் காரமடை அருகே  காந்திநகரில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். 

காரமடை ஆசிரியர் காலனி அருகே சென்று கொண்டிருந்த போது கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி அசுர வேகத்தில் வந்த தனியார் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த தமிழரசன் மற்றும் பீனேஸ் இருவரும் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த காரமடை காவல்துறையினர் ஒட்டுநர் மதியழகனை தேடி வருகின்றனர். விபத்திற்கு பேருந்து அதிவேகமாக இயக்கப்பட்டு வந்ததே காரணம் என குற்றம்சாட்டியுள்ள பொதுமக்கள் மேட்டுப்பாளையம் கோவை சாலையில் அதிக வேகமாக தொடர்ந்து இயக்கப்படும் தனியார் பேருந்துகள் மீது வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

உயிரிழந்த பினேஸ் என்பவருக்கு அன்மையில் திருமணமாகிய நிலையில் அவரது மனைவிக்கு குழந்தை பிறந்து இரண்டு மாதமே ஆவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...