கர்நாடக எல்லையில் தணிந்தது பதற்றம் : வழக்கம்போல லாரி, வாகனங்கள் இயங்கத் தொடங்கின

தமிழக - கர்நாடக எல்லையான ஓசூர் மற்றும் அத்திப்பள்ளியிலும் பதட்டம் தணிந்து உள்ளது. இதனால் தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு வாகன போக்குவரத்து தொடங்கியது.

தமிழக - கர்நாடக எல்லையான ஓசூர் மற்றும் அத்திப்பள்ளியிலும் பதட்டம் தணிந்து உள்ளது. இதனால் தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு வாகன போக்குவரத்து தொடங்கியது.

காவிரி நதிநீர் பிரச்சினையில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதில், கர்நாடக அரசுக்கு ஆதரவாக சில அம்சங்கள் வெளியாகி உள்ளன. கர்நாடக மாநில பாசனத்துக்கு கூடுதல் நீர் திறக்கவும், பெங்களூரூ குடிநீர் திட்டத்துக்கு காவிரி ஆற்று தண்ணீரை பயன்படுத்திக்கொள்ளவும் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது. தமிழகத்துக்கு தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டு உள்ளது. இந்தத் தீர்ப்பை கர்நாடகமும், கன்னட அமைப்புகளும் வரவேற்று உள்ளன.

இதனால், கர்நாடக மாநிலத்திலும், தமிழக - கர்நாடக எல்லையான ஓசூர் மற்றும் அத்திப்பள்ளியிலும் பதட்டம் தணிந்து உள்ளது. இதனால் இன்று காலை 11 மணிக்குப்பிறகு தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு வாகன போக்குவரத்து தொடங்கியது. ஓசூரில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கர்நாடக பதிவெண் கொண்ட லாரிகள், ஆம்னி பேருந்துகள், சரக்கு வாகனங்கள், கார்கள், வேன்கள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் கர்நாடக மாநிலத்திற்குள் அனுமதிக்கப்பட்டன.

இதேபோல, அத்திப்பள்ளியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் அனைத்தும் தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்பட்டன. தமிழக அரசு மற்றும் கர்நாடக அரசு பேருந்துகள் மட்டும் இன்னும் ஓசூர்- பெங்களூரூ இடையே ஓடவில்லை. பேருந்து போக்குவரத்தும் இன்று மாலை முதல் சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று இரவு 11 மணி முதல் பேருந்துகள் ஓசூர்-பெங்களூரூ இடையே ஓடாமல் ஓசூரில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...