மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகள் தாழ்த்தப்பட்ட மக்களை சென்றடைகிறதா..?

மத்திய, மாநில அரசுகளின் மக்கள் நலத்திட்டங்கள் தாழ்த்தப்பட்ட மக்களை சென்றடைகிறதா எனத் தேசிய தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் நல ஆணையம் கண்காணித்து வருவதாக ஆணையத்தின் துணைத்தலைவர் முருகன் தெரிவித்தார்.

திருப்பூர்: மத்திய, மாநில அரசுகளின் மக்கள் நலத்திட்டங்கள் தாழ்த்தப்பட்ட மக்களை சென்றடைகிறதா எனத் தேசிய தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் நல ஆணையம் கண்காணித்து வருவதாக ஆணையத்தின் துணைத்தலைவர் முருகன் தெரிவித்தார். 



 

மங்களம் சாலையில் உள்ள கே.வி.ஆர் நகர் பகுதியில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் மனு வாங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில், தேசிய தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்கள்நல ஆணையத்தின் தேசிய துணைத்தலைவர் முருகன், மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனு பெற்றனர். 



பின்னர் செய்தியாளர்களிடம் துணைத்தலைவர் முருகன் பேசுகையில், மத்திய, மாநில அரசுகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அறிவித்து வழங்கியுள்ள நலத்திட்டங்கள் சரியான முறையில் அவர்களை சென்றடைகிறதா என தேசிய தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்கள் ஆணையம் கண்காணித்து வருகிறது. நேற்றைய தினம் காஞ்சிபுரம் பகுதியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த மக்களுக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கப் பரிந்துரை செய்துள்ளது. மேலும், இறந்தவர்களில் இரண்டுபேர் தாழ்த்தப்பட்ட மக்கள் என்பதால் அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறை அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...