சாலைகளை சீரமைக்கக்கோரி சாலைமறியலில் ஈடுபட்ட தி.மு.க., எம்.எல்.ஏ., கைது

கோவையில் பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்கக்கோரி இன்று சாலைமறியலில் ஈடுபட்ட தி.மு.க., எம்.எல்.ஏ., நா.கார்த்திக்-ஐ போலீசார் கைது செய்தனர்.

கோவை: கோவையில் பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்கக்கோரி இன்று சாலைமறியலில் ஈடுபட்ட தி.மு.க., எம்.எல்.ஏ., நா.கார்த்திக்-ஐ போலீசார் கைது செய்தனர்.

கோவை மாநகராட்சி பகுதிகளில் பழுதடைந்துள்ள சாலைகளை புதிய தார் சாலையாக மாற்றக் கோரி பீளமேடு அவினாசி பகுதியில் எம்.எல்.ஏ., நா.கார்த்திக் தலைமையில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, "கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலைகள் கடந்த ஓராண்டு காலத்திற்கும் மேலாக சாலைகள் பழுதடைந்துள்ளது. வாகனங்களிலும், நடந்தும் செல்லமுடியாத அளவிற்கு சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கிறது. சாலைகளை செப்பனிட்டு புதிய தார் சாலைகளாக அமைக்க வலியுறுத்தி கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மாநகராட்சி பொறியாளர்களிடமும் பலமுறை நேரிலும் , கடிதம் மூலமாகவும் எடுத்துச் சொல்லியும் இன்னும் சரிசெய்யப்படவில்லை. ஆகவே மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும் , உடனடியாக தார் சாலை அமைக்க வேண்டும் இல்லாவிட்டால் தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம்" என்றார். 

இந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ., உட்பட 100 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...