கணவர் மரணத்தில் மர்மம் : முறையாக விசாரணை நடத்தக்கோரி பெண் புகார்

கணவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவரது நண்பர்களிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட திருப்பூர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

திருப்பூர்: கணவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவரது நண்பர்களிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட திருப்பூர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். 



திருப்பூர் போயம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குமார். லாரி ஓட்டுநர். இவர் கடந்த ஜனவரி மாதம் 12-ம் தேதி குன்னத்தூர் பகுதியில் சீட்டு விளையாடச் சென்றதாகவும், அப்போது கிணற்றில் விழுந்ததாகவும் கூறப்படுகிறது.இது தொடர்பாக குன்னத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

இந்நிலையில் இறந்துபோன குமாரின் மனைவி சித்ரா திருப்பூர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றினை அளித்தார். அதில் "என் கணவர் குமார் கடந்த 11-ம் தேதி புதிய லாரி வாங்குவதற்காக ரூ.2,40,000 பணம், 5 பவுன் தங்க சங்கிலி மற்றும் 1 பவுன் மோதிரம் ஆகியவற்றுடன் வீட்டிலிருந்து புறப்பட்டார். 

அவருடன் அவரது நண்பர்கள் ராஜ், சாமி, பிரகாஷ் ஆகியோரும் சென்றதாகவும். நீண்டநேரமாகியும் வீட்டிற்கு வராததால் அவருடைய செல்போன் எண்ணுக்குத் தொடர்பு கொண்டேன். ஆனால், அவர் எடுக்கவில்லை. இந்த நிலையில்,12-ம் தேதி அவரது நண்பர் ராஜ் என்னை அழைத்து குமார் கிணற்றில் விழுந்து இறந்து விட்டதாகக் கூறினார். 

இதுகுறித்து குன்றத்தூர் காவல்நிலைய ஆய்வாளர் தவமணி வழக்குப் பதிவு விசாரணை நடத்து வருகிறார். இறந்து போன எனது கணவரின் மரணத்தில் மர்மம் உள்ளது. அவர் கொண்டு போன பணம், நகை குறித்து இதுவரை எதுவும் தெரியவில்லை. அவரது நண்பர்களிடம் இதுகுறித்து விசாரிக்க வேண்டும். மேலும் குன்னத்தூர் காவல் ஆய்வாளர் தவமணி வழக்கை முறையாக விசாரிக்காததால் வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும்" என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...