சிவராத்திரியை கோலாகலமாகக் கொண்டாடிய பழங்குடியின மக்கள்

நீலகிரி மாவட்டம் தெப்பக்காட்டில் உள்ள ஸ்ரீ பொம்மதேவர் கோயிலில் பழங்குடியினர் சிவராத்திரி விழாவை கோலாகலமாக கொண்டாடினர். இதனை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.


நீலகிரி : நீலகிரி மாவட்டம் தெப்பக்காட்டில் உள்ள ஸ்ரீ பொம்மதேவர் கோயிலில் பழங்குடியினர் சிவராத்திரி விழாவை கோலாகலமாக கொண்டாடினர். இதனை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட பொதுமக்கள் கண்டு ரசித்தனர். 



முதுமலை, தெப்பக்காடு, கார்குடி, தொரப்பள்ளி, பொக்காபுரம், சொக்கநள்ளி கிராமங்களில் ஏராளமான பழங்குடியினர் வசிக்கின்றனர். இவர்கள் தெப்பக்காட்டில் உள்ள ஸ்ரீ பொம்மதேவர் கோயிலில் ஆண்டுதோறும் சிவராத்திரி விழாவை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்தாண்டுக்கான விழா கடந்த 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 14-ம் தேதி சிவனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. 15-ம் தேதி பழங்குடியின மக்களின் கலாச்சார ஆட்டம் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி இன்று நடந்தது. 

விழாவில் பங்கேற்க முதுமலை, தெப்பக்காடு, கார்குடி, தொரப்பள்ளி, பொக்காபுரம், சொக்கநள்ளி, பந்திப்பூர் பகுதிகளில் பெட்டுக்குறும்பர் மற்றும் இருளர் மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இவர்கள் கடந்த நான்கு நாட்களாக கோயில் வளாகத்திலேயே தங்கி விழாவை உற்சாகமாகக் கொண்டாடினர். இன்று காலை முதல் மாலை வரை பழங்குடியினர் மக்கள் கோயில் வளாகத்தில் தங்கள் கலாச்சார நடனங்களை ஆடி மகிழ்ந்தனர். பழங்குடியினரின் நடனங்களை பொதுமக்கள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். இரவு பழங்குடியின மக்கள் தங்கள் நேர்க்கடனை நிறைவேற்ற பூங்குண்டத்தில் இறங்கினர். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...