காவிரி நதிநீர் பங்கீடு தீர்ப்பால் இருமாநில எல்லைகளில் அவதிப்பட்ட பயணிகள்

காவிரி நதிநீர் பங்கீடு வழக்கின் தீர்ப்பு வெளியாவதற்கு முன்னதாக, தமிழகம், கர்நாடக எல்லையில் பேருந்துகள் மாறி, மாறி ஏறிச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டதால் பயணிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர்.

நீலகிரி : காவிரி நதிநீர் பங்கீடு வழக்கின் தீர்ப்பு வெளியாவதற்கு முன்னதாக, தமிழகம், கர்நாடக எல்லையில் பேருந்துகள் மாறி, மாறி ஏறிச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டதால் பயணிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். 



காவிரி நதிநீர் பங்கீடு வழக்கின் தீர்ப்பு வெளியாவதற்கு முன்னதாக, நீலகிரி மாவட்டத்திலிருந்து கர்நாடகா மாநிலம் செல்லும் அரசு பேருந்துகள் முன்னெச்சரிக்கையாக காலை முதலே எல்லையில் நிறுத்தப்பட்டன. பின்னர், எல்லை வரை இயக்கப்பட்டன. தீர்ப்பு வெளியானதை அடுத்து தமிழக எல்லையான கக்கநல்லா சோதனைச்சாவடியில் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், கூடலூர் டிஎஸ்பி பி.ரவிசங்கர் தலைமையில் பாதுகாப்பு போடப்பட்டது.



தமிழகத்திலிருந்து கர்நாடக மாநிலம் செல்லும் வாகனங்கள் அனைத்தும் கக்கநல்லா சோதனைச்சாவடியில் நிறுத்தப்பட்டன. கர்நாடகாவிலிருந்து வந்த வாகனங்களும் கக்கநல்லாவில் நிறுத்தப்பட்டன. அங்கிருந்து அரசு பேருந்துகளில் வந்த பயணிகள் இறக்கப்பட்டனர். பயணிகள் பேருந்துகளிலிருந்து இறங்கி நடந்து வந்து சோதனைச்சாவடியை கடந்து தமிழக எல்லையில் நிறுத்தப்பட்ட அரசு பேருந்தகளில் ஏறி உதகை பயணித்தனர். ஆனால், சுற்றுலா வாகனங்கள் இரு மாநிலத்துக்குள்ளும் நுழைய போலீஸார் அனுமதிக்காததால், சுற்றுலாப் பயணிகள் செய்வதறியாது எல்லையில் தவித்தனர். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...