கோவை - மத்தியபிரதேசம் இடையிலான அதிவிரைவு சிறப்பு கட்டண ரயில் அறிவிப்பு

போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், பயணிகளின் வசதிக்காகவும் கோவை - ஜபால்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கோவை : போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், பயணிகளின் வசதிக்காகவும் கோவை - ஜபால்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

ரயில் எண் - 02197 கோவை - ஜபால்பூர் (மத்தியபிரதேசம்) வாராந்திர அதிவேக சிறப்புக் கட்டண ரயில் வரும் ஏப்ரல் 09-ம் தேதி முதல் ஜுன் 04-ம் தேதி வரை இயக்கப்படுகிறது. வரும் ஏப்ரல் 09-ம் தேதி (திங்கள்கிழமை) மாலை 07.05 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் இந்த ரயில், புதன்கிழமை காலை 10.20 மணிக்கு சென்றடைகிறது.  

இதேபோல, ரயில் எண் - 02197 கோவை - ஜபால்பூர் (மத்தியபிரதேசம்) வாராந்திர அதிவேக சிறப்புக் கட்டண ரயில் வரும் ஜுன் 11-ம் தேதி முதல் ஜுலை 02-ம் தேதி வரை இயக்கப்படுகிறது. வரும் ஜுன் 011-ம் தேதி (திங்கள்கிழமை) மாலை 07.00 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் இந்த ரயில், புதன்கிழமை மதியம் 12.45 மணிக்கு சென்றடைகிறது.  

மேலே குறிப்பிட்ட ரயில்கள் கோவையில் இருந்து திங்கட்கிழமைகளில் மட்டுமே இயக்கப்படுகிறது. இதில், 2 குளிரூட்டப்பட்ட பெட்டிகளும், ஸ்லீப்பர் வசதியுடன் 10 பெட்டிகளும், பொதுப் பிரிவில் 4 மற்றும் பொருட்கள் எடுத்துச் செல்ல 2 பெட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன. 

வாராந்திர அதிவேக ரயில்  - ஜபால்பூரில் இருந்து சனிக்கிழமை முதல் 04.11.2017 மற்றும் 30.11.2017 வரை 9 முறை இயக்கப்படும்.

கோவையில் இருந்து திங்கட்கிழமை முதல் 06.11.2017 மற்றும் 01.01.2018 வரை 9 முறை இயக்கப்படும் 

இந்த ரயிலானது, பாலக்காடு, சொர்ணூர், திரூர், கோழிக்கோடு, வடகரா, தலச்சேரி, கன்னூர், பயனூர், கன்ஹாங்கட், கஷராஹோடு, மங்களூரு ரயில்நிலையம், முல்கி, உடுப்பி, மூகாம்பிகா சாலை பைந்தூர், குமதா, கர்வார், மட்கோன், திவிம், கூடல், கன்கவளி, ரத்னிகிரி, சிப்லுன், கேட், ரோஹா, பன்வேல், இகத்பூரி, மன்மத், புஷாவல், கந்த்வா, ஹர்தா, இட்டர்சி, பிப்பரியா, கதர்வாரா மற்றும் நரசிங்பூர் ஆகிய ரயில்நிலையங்களில் நிறுத்தப்படும்.

இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு நாளை (பிப்.,17) முதல் தொடங்குகிறது. 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...