காதலிக்க மறுத்த மாணவியை எரித்துக் கொல்ல முயற்சி

மதுரையில் காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை வாலிபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்ல முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


மதுரை : மதுரையில் காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை வாலிபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்ல முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த நடுவக்கோட்டை பகுதியை சேர்ந்தவர்  மணிப்பாண்டி. இவரது மனைவி பேச்சியம்மாள். 

இந்த தம்பதியினருக்கு சித்ராதேவி (14) என்ற மகள் உள்ளார். இவர் திரளியை அடுத்த அச்சம்பட்டி பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்துவருகிறார்.

இந்த நிலையில், நடுவக்கோட்டை பகுதியை சேர்ந்த சந்தானம் என்பவரது மகன் பாலமுருகன் (23) என்பவர் சித்ராதேவி-யை ஒரு தலைபட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 

இவர் கடந்த 14-ம் தேதி காதலர் தினத்தன்று பள்ளி மாணவியிடம் தனது காதலை ஏற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.

இதற்கு சித்ராதேவி மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது.இதனால் பாலமுருகன் ஆத்திரமடைந்தார். 

தொடர்ந்து, இன்று மாலை பள்ளி முடிந்து மாணவி பேருந்துக்காக காத்திருந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த பாலமுருகன் தன்னிடம் இருந்த 2 லிட்டர் பெட்ரோலை மாணவியின் உடல் மீது ஊற்றி தீப்பற்ற வைத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். 

இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டு திருமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

தொடர்ந்து, அவர் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக, வழக்குப் பதிவு செய்த போலீசார் தப்பியோடி பாலமுருகனை தேடி வருகின்றனர். 

காதலை ஏற்க மறுத்த பள்ளி மாணவியை எரித்துக் கொல்ல முயன்ற சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...