ஜெ., பிறந்த நாளையொட்டி அன்னதானம் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த முதலமைச்சர்

ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அன்னதான நிகழ்ச்சியை, உணவுகளைப் பரிமாறி முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

மேட்டுபாளையம்: ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அன்னதான நிகழ்ச்சியை, உணவுகளைப் பரிமாறி முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள முத்தலாம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். பின்னர், குன்னூரில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற பின்னர், அவர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு வருகை புரிந்தார். கோவை அ.தி.மு.க., அம்மா பேரவை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு 10,000 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அங்கு குழுமியிருந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பொதுமக்களுக்கு உணவுகளைப் பரிமாறி அன்னதானத்தை தொடங்கிவைத்தார்.

அவருடன் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் கோவை, நீலகிரி மாவட்ட எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் கலந்துகொண்டனர். மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் வளாகத்தில் நடைபெற்ற இந்த அன்னதான நிகழ்ச்சியில் முதலமைச்சர் பங்கேற்ற காரணத்தால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நிகழ்ச்சியை முடித்து விட்டு முதலமைச்சர் பழனிச்சாமி தனது சொந்த ஊரான எடப்பாடிக்கு புறப்பட்டுச் சென்றார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...