எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் வாபஸ் - 5 நாட்களாக நடந்த போராட்டம் முடிவுக்கு வந்தது

மாநில அளவிலான டெண்டருக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் நடத்தி வந்த 5 நாட்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது.

மாநில அளவிலான டெண்டருக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் நடத்தி வந்த 5 நாட்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது.

மண்டல அளவிலான வாடகை டெண்டர் முறை மாற்றப்பட்டு புதிதாக மாநில அளவிலான டெண்டர் முறை அமல்படுத்தப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் கடந்த 12-ந் தேதி வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய 6 மாநிலங்களில் சுமார் 4,500 எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் இயக்கப்படாததால், சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பாட்டிலிங் மையங்களுக்கு எரிவாயு கொண்டு செல்லும் பணி பாதிக்கப்பட்டது. சிலிண்டர்களில் எரிவாயு நிரப்பும் பணியும் பாதிக்கப்பட்டது. கடந்த 14-ந் தேதி மும்பையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்ந்தது. தென்மண்டலத்தில் சுமார் 13 ஆயிரம் டன் எரிவாயு எடுத்துச் செல்லும் பணியும், 14 லட்சம் சிலிண்டர்களில் எரிவாயு நிரப்பும் பணியும் முடங்கியது.

6-வது நாளாக போராட்டம் நீடித்ததால் தமிழகம் உள்பட 6 மாநிலங்களிலும் பெரும்பாலான பகுதிகளில் ஓரிரு நாளில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவானது. எனவே, போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, லாரி உரிமையாளர்களின் சில கோரிக்கைகளை ஏற்க எண்ணெய் நிறுவனங்கள் சம்மதம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், நாமக்கல்லில் இன்று தென்மண்டல எல்.பி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூடி ஆலேசானை நடத்தினர். இந்த ஆலோசனையின்போது, டெண்டர் தொடர்பாக எண்ணெய் நிறுவனங்கள் உறுதி அளித்திருப்பதால் வேலைநிறுத்தப் போராட்டத்தை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. அதேசமயம், லாரி உரிமையாளர்களின் முக்கிய கோரிக்கை பற்றி தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. இதன்மூலம், கடந்த 5 நாட்களாக நடந்த வேலைநிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...