முதலமைச்சர் வருகையையொட்டி வைக்கப்பட்ட கட்சிக் கொடி கம்பம் சாய்ந்ததில் ஒருவர் படுகாயம்

நீலகிரியில் முதலமைச்சருக்காக வைக்கப்பட்ட கட்சிக்கொடி கம்பம் சாய்ந்து விழுந்ததில், பலத்த காயமடைந்தவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நீலகிரி: நீலகிரியில் முதலமைச்சருக்காக வைக்கப்பட்ட கட்சிக்கொடி கம்பம் சாய்ந்து விழுந்ததில், பலத்த காயமடைந்தவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

குன்னூர் ஒட்டுபட்டறையில் உள்ள முத்தாலம்மன் திருக்கோவிலின் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. இதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, கோவை, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். இவர்கள் வருகையையொட்டி, மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை வழிநெடுகிலும் பேனர்களும் கொடிக் கம்பங்களும் வைக்கப்பட்டிருந்தன. 



இந்த நிலையில், பாரூக் என்பவர் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். குன்னூரைச் சேர்ந்த லால்ஸ் ஃபால்ஸ் அருகே சென்ற போது, கொடிக் கம்பம் அவர் மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். பின்னர், அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள், பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீஸ் உதவியுடன் குன்னூர் லாலி அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து அறிந்த பாரூக்கின் உறவினர்கள் குன்னூர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.



பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு, பாரூக்குக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பேனர் கலாச்சாரத்தால் பொதுமக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் குற்றம்சாட்டினர். நீதிமன்ற உத்தரவுகளை மீறி பொதுமக்களுக்கு இன்னல் தரும் கட் அவுட், கொடி கம்பங்கள் வைப்போர் மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஏற்கனவே, அ.தி.மு.க., பேனரால் இறந்த ரகுவின் மரணத்திற்கு சரியான நீதி கிடைக்காத போது, அடுத்தடுத்து பொதுமக்களுக்கு துன்பம் தருவது பொதுமக்களை விரக்தியில் ஆழ்த்தியுள்ளது. தவறுகளைக் கண்டிக்க வேண்டிய ஆட்சியாளர்களே ஆட்சியில் இருக்கும் போது பொதுமக்களுக்கு எதிராக துன்பம் கொடுத்தால் புகார்களை யாரிடம் தருவது என்ற கேள்வியும் உள்ளங்களில் எழுகிறது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...