உதகை - குன்னூர் சாலையில் எச்சரிக்கை பலகை மற்றும் தடுப்புச்சுவர்கள் அமைக்கக் கோரிக்கை

நீலகிரி மாவட்டம் உதகை - குன்னூர் சாலையில் தொடரும் விபத்துகளை தடுக்கும் வகையில், எச்சரிக்கை பலகை மற்றும் தடுப்பு சுவர்களை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை - குன்னூர் சாலையில் தொடரும் விபத்துகளை தடுக்கும் வகையில், எச்சரிக்கை பலகை மற்றும் தடுப்பு சுவர்களை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



நீலகிரி மாவட்டத்தின் பெரும்பாலான சாலைகள் மலைப்பகுதிகள் மற்றும் சரிவு பகுதிகளில் அமைந்துள்ளது. இதேபோல, உதகை - குன்னூர் சாலை கேத்தி பள்ளத்தாக்கை ஒட்டிய சரிவு பகுதிகளில் அமைந்துள்ளது. உதகை நகருக்கு செல்லக்கூடிய முக்கிய சாலையாக இது அமைந்திருப்பதால், நாள்தோறும் ஏராளமான சுற்றுலா வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையில் முறையான தடுப்பு சுவர்கள் மற்றும் பள்ளத்தாக்கு குறித்த எச்சரிக்கை பதாகைகள் எதுவும் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதிகளில் நாளுக்கு நாள் விபத்து எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பல உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. எனவே, இதனைக் கருத்தில் கொண்டு விபத்துகளை தடுக்கும் வகையில், எச்சரிக்கை பதாகைகள் மற்றும் சாலை ஓரங்களில் முறையான தடுப்பு சுவர்கள் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தினருக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...