பயன்பாடற்று கிடக்கும் தடுப்பணைகளை பராமரிக்கக் கோரிக்கை

நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளில் முறையாகப் பராமரிக்கப்படாமல் கிடக்கும் தடுப்பணைகளை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளில் முறையாகப் பராமரிக்கப்படாமல் கிடக்கும் தடுப்பணைகளை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே, ஜீன் மாதங்களில் தென்மேற்கு பருவமழையும், அக்டோபர், நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமையும் பெய்யும். கடந்தாண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவிற்கு மேலாக பெய்தாலும், வடகிழக்கு பருவமழை மழை முற்றிலும் பொய்த்தது.

இந்நிலையில் வறண்டு காணப்பட்ட அணைகள் மற்றும் தடுப்பணைகளில் தண்ணீர் உயர்மட்டம் உயர்ந்து வந்த நிலையில், உதகையை அடுத்த கடநாடு, ஒடயரட்டி, கூக்கல், கூக்கல்தொரை உள்ளிட்ட பல கிராமப்புறங்களில் விவசாயிகளின் நலன் கருதியும், கிராம மக்களின் குடிநீர் நலன் கருதியும் பல இலட்சம் ரூபாய் மதிப்பில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால், தற்போது இந்த தடுப்பணைகள் போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தினால் தண்ணீர் வீணாகி வருகின்றன. இதனால், மலைதோட்ட காய்கறிகள் பயிரிட்டுள்ள விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.



எனவே, மாவட்ட நிர்வாகம் துரிதகதியில் கிராமப்புற பகுதிகளில் உள்ள தடுப்பணைகள் மற்றும் குடிநீர் ஆதாரங்களாக உள்ள அணைகளை தூர்வாரி முறையாகப் பராமரித்தால் மட்டுமே வரும் கோடைகாலத்தில் தண்ணீர் தட்டுப்பாடின்றி விவசாயம் மேற்கொள்வதோடு, குடிநீர் பிரச்சனைக்கும் முழு தீர்வு காண முடியும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...