உதகை அரசு தாவரவியல் பூங்காவில் கண்ணாடி மாளிகை மறுசீரமைக்கும் பணிகள் தீவிரம்

நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையை மறுசீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையை மறுசீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டிருந்த சில கண்ணாடி மாளிகைகள் உள்ளன. அதில், பலவகையான தாவரச்செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. தாவரவியல் பூங்காவில் பிரதான பகுதியில் உள்ள கண்ணாடி மாளிகையில் கண்ணாடிகள் உடைந்து, கட்டுமானம் பழுதடைந்து இருந்தமையால் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதனால், அதில் வைக்கப்பட்டிருந்த செடி மற்றும் தாவர வகைகளை சுற்றுலாப் பயணிகள் காண முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.



இந்த நிலையில், தாவரவியல் பூங்காவை மேம்படுத்த மாநில அரசின் சார்பில் ரூ. 5.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்போது சீரமைப்பு பணிகள் தொடங்கியுள்ளது. இதன் ஒருபகுதியாக பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையை மறுசீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் எதிர்வரும் பிரதான சீசனுக்கு முன்பு நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...