நல்லகண்ணுவுடன் நடிகர் கமலஹாசன் திடீர் சந்திப்பு

சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவை நடிகர் கமலஹாசன் சந்தித்துப் பேசினார்.

சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவை நடிகர் கமலஹாசன் சந்தித்துப் பேசினார்.

ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு தங்களது அரசியல் என்ட்ரிக்கு காத்துக்கொண்டிருக்கின்றனர். இருவரும் தங்கள் மக்கள் மன்றத்தின் மூலம் அரசியல் கட்சி தொடங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ரஜினியைக் காட்டிலும் கமலஹாசன் வேகமாகச் செயல்பட்டு வருகிறார். அதன்படி வரும் 21-ம் தேதி அப்துல் கலாம் நினைவிடத்தில் தனது கட்சிப் பெயரை அறிவிப்பதுடன், மதுரையில் கூட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளார். இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

அரசியல் கட்சி தொடங்கவுள்ள நிலையில் மூத்த தலைவர்களைச் சந்தித்து கமல் ஆலோசனை நடத்திவருகிறார். அதன்படி இன்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை அவரது இல்லத்துக்கே சென்று சந்தித்துப் பேசினார். அப்போது, ஹேராம் என்ற புத்தகத்தை நல்லகண்ணுக்கு அவர் பரிசளித்தார். பதிலுக்கு நல்லகண்ணுவும் கீழடி என்ற புத்தகத்தைப் பரிசளித்தார்.

சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த கமல், "நான் மதிக்கும் நபர்களைச் சந்தித்துப் பேசிவருகிறேன். கட்சியைத் தாண்டி மக்களுக்கு சேவை செய்து வருவதால் நல்லகண்ணுவை சந்தித்தேன். எனது பணி சிறக்க அவரை மரியாதை நிமித்தமாகச் சந்தித்ததோடு மதுரையில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளேன். மக்களுக்கு சேவை செய்பவர்கள் அனைவரையும் மதிக்க நான் கடமைப்பட்டுள்ளேன். இடதுசாரி தலைவர்கள் மட்டுமல்லாது அனைத்துத் தரப்பு தலைவர்களையும் சந்திப்பேன்" என்று கூறினார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...