காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற ஊழலை திசைதிருப்ப முயற்சி: நிர்மலா சீதாராமன்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நிரவ் மோடி செய்த மோசடி காங்கிரஸ் ஆட்சியின் போது நடைபெற்றதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நிரவ் மோடி செய்த மோசடி காங்கிரஸ் ஆட்சியின் போது நடைபெற்றதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நிரவ் மோடி மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பி சென்றுவிட்டார். இந்த மோசடி குறித்து மத்திய அரசை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்து வருகிறது. 

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசினார். அப்போது, அவர் கூறியதாவது :- ஊழலில் சாதனை படைத்துள்ள காங்கிரஸ், வங்கி மோசடி குறித்து மத்திய அரசைக் குறை சொல்கிறது. அக்கட்சி தவறான குற்றச்சாட்டுகள் மூலம் நாட்டைத் தவறாக வழிநடத்தவும் முயற்சி செய்கிறது. உண்மையில். நிரவ் மோடி வங்கியில் மோசடி செய்தது கடந்த 2011ம் ஆண்டில் தான். மோசடியில் தொடர்புடைய கீதாஞ்சலி நிறுவனம் கடந்த 2013-ம் ஆண்டில் பங்குச்சந்தை நடவடிக்கையில் ஈடுபட தடை விதிக்கப்பட்டது. அதே ஆண்டு செப்.,13-ல் அந்த நிறுவனம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டார். அதற்குப் பிறகு, 2 நாட்கள் கழித்து செப்.,15ல் அந்த நிறுவனத்திற்கு கூடுதலாக கடன் வழங்க அலகாபாத் வங்கிக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது. இதன் தொடர்புகளை இணைத்து பாருங்கள். காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.எம். சிங்வியின் மனைவி அனிதா, நிரவ் மோடியின் நகைக்கடையுடன் தொடர்புடைய நிறுவனம் ஒன்றின் இயக்குநராக உள்ளார். 

குற்றவாளிகளுடன் நெருங்கிய தொடர்பு இருந்தும், காங்கிரஸ் கட்சி தைரியமாகப் பா.ஜ.க., மீது குற்றம்சாட்டுகிறது. காங்கிரஸ் செய்த குழப்பங்களை மத்திய அரசு சரி செய்து வருகிறது. நிரவ் மோடி மோசடி செய்தது வெளிச்சத்திற்கு வந்ததும், அவரைப் பிடிக்க அரசு நடவடிக்கை எடுத்தது. நிரவ் மோடி நாட்டை விட்டு ஓடியிருக்கலாம். ஆனால், அவருக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...