காவிரி தீர்ப்பின் மூலம் தமிழகத்தின் பலவீனம் வெளிப்படுகிறது: இயக்குநர் ராஜு முருகன்

தமிழகத்தின் பலவீனத்தை காவிரி தீர்ப்பு வெளிக்காட்டுவதாகவும், இதற்கு சரியான தலைமையும், ஆளுமையும் இல்லாததே காரணம் என திரைப்பட இயக்குநர் ராஜூ முருகன் தெரிவித்துள்ளார்.


கோவை: தமிழகத்தின் பலவீனத்தை காவிரி தீர்ப்பு வெளிக்காட்டுவதாகவும், இதற்கு சரியான தலைமையும், ஆளுமையும் இல்லாததே காரணம் என திரைப்பட இயக்குநர் ராஜூ முருகன் தெரிவித்துள்ளார்.

கோவையில் திரைப்பட இயக்குநர் ராஜூ முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது :- தனது அடுத்த படமான ஜிப்ஜி, எல்லாப் பாடங்களை போல மக்களுக்கான சமூகம் சார்ந்த அரசியல் படமாக இருக்கும். தமிழக சூழலில் சாதி அபாயமாக மாறிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு சாதி ஆணவ கொலைகளுக்கு பின்னால் அரசியல் இருக்கிறது. டிஜிட்டல் இந்தியாவில் சாதியம், மதவாதம் தீவிரமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. சாதி, மதவாதத்தில் இருந்து பெரியார் மற்றும் அம்பேத்கரின் கருத்துகள்தான் மக்களைக் காப்பாற்றி கொண்டிருக்கிறது. இதனை உடைப்பதற்கான முயற்சிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தமிழக அரசு நிர்வாகம் பலவீனப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து கொண்டிருக்கிறது. இன்றைய நிலையில் மக்கள் ஜோக்கர்கள் ஆக்கப்படுகின்றனர். தமிழகத்தின் நிலை எவ்வளவு பலவீனப்பட்டுள்ளது என்பதை காவிரி தீர்ப்பு காட்டுகிறது. இதற்கு சரியான தலைமையும், ஆளுமையும் இல்லாததே காரணம். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...