திருப்பூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு குறித்து அமைச்சர் இறுதிகட்ட ஆய்வு

திருப்பூரில் நாளை (பிப்.,18) நடைபெறவிருக்கும் ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இறுதிகட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.


திருப்பூர்: திருப்பூரில் நாளை (பிப்.,18) நடைபெறவிருக்கும் ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இறுதிகட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.



பொங்கலூர் ஒன்றியத்திற்குட்பட்ட அலகுமலையில் நாளை ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதற்காக, அப்பகுதியில் வாடிவாசல் அமைக்கும் பணிகள் நிறைவடைந்தன. மேலும், ஒரேநேரத்தில் சுமார் 8 ஆயிரம் பார்வையாளர்கள் வரை அமரக்கூடிய வகையில் இருக்கைகள் மற்றும் இருபுறமும் தடுப்பு வேலிகள், மருத்துவ முகாம் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு ஏராளமான பரிசு பொருட்கள் குவிந்துள்ளன. இதனிடையே, ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்ட கால்நடைதுறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் விலங்குகள் நல அலுவலர் மிட்டல் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.



இதனிடையே, நாளை நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், 720 மாடுகள் பங்கேற்றுள்ள இந்த ஜல்லிக்கட்டுப் போட்டி 9 சுற்றாக நடைபெறும் என்றும், மாடுபிடி வீரர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்களுக்கு தமிழகத்தில் எங்கும் இதுவரை கொடுக்காத பரிசுகள் கொடுக்கப்படும் எனக் கூறினார்.



Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...