ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் குறித்து சீமா உறுப்பினர்கள் ஆலோசனை

ஸ்டார்ட அப் இந்தியா திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்துவதற்கான வரைவு கொள்கைகள் வகுப்பது குறித்து தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் (சீமா) ஆலோசனை நடத்தினர்.

கோவை: ஸ்டார்ட அப் இந்தியா திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்துவதற்கான வரைவு கொள்கைகள் வகுப்பது குறித்து தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் (சீமா) ஆலோசனை நடத்தினர்.

பாரத பிரதமர் மோடி அறிவித்த ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் முக்கிய நோக்கம், தொழில் தொடங்க தடையாக உள்ள பல்வேறு சட்ட திட்டங்களை எளிமைப்படுத்துவது மற்றும் தொழில் தொடங்க ஆதரவான சூழல் உருவாக்குதல், நிதியுதவி மற்றும் ஊக்கத்தொகை வழங்குதல், கல்வி நிலையங்கள், தொழில்நிறுவனங்களோடு கூடிய ஒத்துழைப்பிற்கு மற்றும் தொழில்காப்பதிற்கு ஊக்கமளித்தல் போன்றவையாகும்.

பல்வேறு மாநிலங்களின் வேறுபட்ட தொழில் கொள்கைகளின் காரணமாக, பல தொழில்நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணைந்து நாடு முழுவதும் 75 தொழில் காப்பகங்களை  என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.எஸ்.சி.  உடன் இணைந்து அமைக்க முடிவெடுத்துள்ளது. 

இந்த நிலையில், இந்த ஸ்டார்ட் அப் திட்டத்தினை தமிழகத்தில் செயல்படுத்த வரைவு கொள்கைகள் வகுப்பது குறித்து சீமாவில் கூடுதல் இயக்குநர் சஜீனா தலைமையில் நேற்று கலந்துரையாடல் நடைபெற்றது. அப்போது, ஸ்டார்ட் அப் திட்டத்தின் மூலம் தொழில் நிறுவனங்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளும் சீமா வழங்கும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், அனைத்து கருத்துக்களையும் ஒன்றிணைத்து, ஒரு வரைவு திட்டத்தினை கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் அனுப்பி, அதற்கான ஒப்புதல் பெற்றபின் அரசிற்கு சமர்ப்பிக்க முடிவு எடுக்கப்பட்டது. 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...