சொந்த மைதானத்தில் முதல் வெற்றியை சுவைத்தது சென்னை எப்.சி.

ஐ லீக் கால்பந்து போட்டியில் கோவா சர்ச்சில் பிரதர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோல்மழை பொழிந்ததன் மூலம் சென்னை அணி, சொந்த மைதானத்தில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

கோவை: ஐ லீக் கால்பந்து போட்டியில் கோவா சர்ச்சில் பிரதர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோல்மழை பொழிந்ததன் மூலம் சென்னை அணி, சொந்த மைதானத்தில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

இந்தியாவின் தலைசிறந்த 10 அணிகள் பங்கேற்கும் ஹுரோ ஐ-லீக் கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் 18 போட்டிகளில் விளையாடி, அதில் அதிக புள்ளிகள் பெறும் அணி சூப்பர் 6 போட்டிக்குத் தகுதி பெறும். சென்னை அணிக்கு கோவை வ.ஊ.சி உள்விளையாட்டு அரங்கம் சொந்த மைதானமாக உள்ளது. இந்த நிலையில், சென்னை அணி தனது 17-வது லீக் ஆட்டத்தில், கோவா சர்ச்சில் பிரதர்ஸ் அணியை எதிர்கொண்டது.

ஆரம்ப முதலே அதிரடியாக ஆடிய சென்னை அணியினரின் ஆட்டத்திற்கு, கோவா வீரர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. போட்டியின் 26-வது நிமிடத்தில் சென்னை அணியின் அலெக்ஸாண்டர் ராகிக் செர்பியா முதல் கோலை அடித்தார். இதனால், உள்ளூர் ரசிகர்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி அடங்குவதற்குள், கேப்டன் சூசைராஜ் 28-வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். இதன்மூலம் முதல்பாதி ஆட்டத்தின் முடிவில் சென்னை அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

இதைத் தொடர்ந்து, 2-வது பாதி ஆட்டம் தொடங்கியதும் சென்னை அணியே ஆதிக்கம் செலுத்தியது. 53-வது நிமிடத்தில் சென்னை அணியின் கேப்டன் சூசைராஜ் மீண்டும் ஒருகோலை அடித்து அமர்க்களப்படுத்தினார். இதனால், 3-0 என்ற கோல் கணக்கில் சென்னை அணி முன்னிலை வகித்ததால், ரசிகர்கள் ஆராவாரத்துடன் காணப்பட்டனர். இறுதியில் அளிக்கப்பட்ட கூடுதல் நேரத்தின் போது 91-வது நிமிடத்தில் கோவா சர்ச்சில் பிரதர்ஸ் அணியின் கேப்டன் ஒகி மாண்டே ஆறுதல் கோலடித்தார். முடிவில் சென்னை அணி 3-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் சொந்த மைதானத்தில் 8 போட்டிகளில் விளையாடிய சென்னை அணி (ஒரு வெற்றி, 2 தோல்வி, 5 டிரா) முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...