சாலை விபத்தில் போலீஸ் நண்பர்கள் குழுவை சேர்ந்த இளைஞர் பலி

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடந்த சாலை விபத்தில் போலீஸ் நண்பர்கள் குழுவை சேர்ந்த இளைஞர் பலியானார்.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடந்த சாலை விபத்தில் போலீஸ் நண்பர்கள் குழுவை சேர்ந்த இளைஞர் பலியானார்.

பல்லடம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சந்திரன். இவரும் போலீஸ் நண்பர்கள் குழுவை சார்ந்த ஜெகதீஸ் என்கிற இளைஞரும் இருசக்கர வாகனத்தில் இரவு ரோந்து பணிக்காக சென்றுள்ளனர். திருச்சி சாலையில் சென்று கொண்டிருந்த போது பொதுப்பணித்துறை குடியிருப்பு அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துள்ளானதாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ஜெகதீஸ் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். மேலும் உடன் சென்ற சிறப்பு உதவி ஆய்வாளரும் படுகாயம் அடைந்தனர்.

அப்போது, அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இச்சம்பவம் குறித்து பல்லடம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலை அடுத்து விரைந்து சென்ற காவல்துறையினர் இருவரையும் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பலத்த காயம் அடைந்த ஜெகதீசை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் படுகாயம் அடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரனுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் கோவை தனியார் மருத்துவ மனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

பின்னர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த பல்லடம் போலீசார் விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...