பிரதமர் மோடி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் - தா.பாண்டியன்

காவிரி விவகாரம் குறித்து உச்ச நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால் பிரதமர் மோடி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

கோவை : காவிரி விவகாரம் குறித்து உச்ச நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால் பிரதமர் மோடி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாநகர மேற்கு மண்டல மாநாடு, கோவை வேளாண்டிபாளையம் பகுதியில் நடைபெற்றது. இதில் விலைவாசி உயர்வு, பேருந்து கட்டணம் உயர்வு போன்றவற்றை கண்டித்து 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய குழு உறுப்பினர் தா.பாண்டியன் கலந்துகொண்டார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :-  

மார்ச் இறுதியில் மாநில மாநாடும், ஏப்ரலில் அகில இந்திய மாநாடும் நடத்த உள்ளோம். அதில் அரசியல் தீர்மானங்கள் மற்றும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.

காவிரி நதிநீர் பங்கீடு குறித்து உச்ச நீதிமன்ற தீர்ப்பை குறைகூற விரும்பவில்லை. தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு நிறைவேற்றப்படுமா? என்று கேள்வி எழுந்துள்ளது. முன்னதாகவே 3 மாதங்களில் காவிரி மேலாண்மை குழு அமைக்க வேண்டும் என்று நீதிமன்றம்  உத்தரவிட்டதை நிறைவேற்ற இந்த அரசு தவறிவிட்டது. இந்த நிலையில், தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை மத்திய அரசு நிறைவேற்றுமா? என்று தெரியவில்லை. 

உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து,மேல் முறையீடு செய்வேன் என கர்நாடக  முதல்வர் கூறி உள்ள நிலையில், மேல் முறையிடு செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்ற கூறியது வெறும் கருத்துரையா அல்லது கண்டிப்பான தீர்ப்பா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். தீர்ப்பின் அடிப்படையில் நதி நீர் பங்கீட்டை கணினி மூலமாக  தீர்மானிக்கும் வகையில் வழிவகை செய்ய வேண்டும். மாநிலத்திற்கு ஒரு பிரதி நிதி என்ற அடிப்படையில் கண்காணிப்பு பணிக்கு மட்டும் ஒருவர் நியமித்தால் போதுமனது 

காவிரி விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை மத்திய அரசு மதிக்காவிட்டால் பிரதமர் மோடி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...