தற்காப்புக்காக புலியை தாக்கிக் கொன்ற முதியவர்

கிருஷ்ணகிரி அருகே தன்னை தாக்க வந்த சிறுத்தை புலியை முதியவர் ஒருவர் கத்தியால் தாக்கிக் கொன்றார்.


கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே தன்னை தாக்க வந்த சிறுத்தை புலியை முதியவர் ஒருவர் கத்தியால் தாக்கிக் கொன்றார்.



கிருஷ்ணகிரி மாவட்டம் மஹாராஜாகடை அடுத்த மேலுகொல்லை பகுதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (62). வனப்பகுதியை ஒட்டி உள்ள விவசாய நிலத்தில் கால் நடைகள் வைத்து பராமரித்து வருகிறார்.

இந்த நிலையில், இன்று காலை விவசாய நிலத்தில் பசு மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அங்கு வந்த சிறுத்தை புலி ராமமூர்த்தியை தாக்க முற்பட்டது. இதனை அடுத்து சிறுத்தை புலியிடம் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள மாடுகளுக்கு இலை கொடிகள் வெட்டுவதற்கு வைத்து இருந்த கத்தியால் அதனைத் தாக்கினார். இதில் சிறுத்தை புலியின் கால், கழுத்து, முதுகு போன்ற இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு சிறுத்தை புலி பலியானது. 



இதில் ராமமூர்த்தியும் காயமடைந்தார். தற்போது அவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

முதியவர் தாக்கியதில் சிறுத்தைப் புலி பலியானதை அடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஓசூர் வனகோட்ட கால்நடை மருத்துவர் பிரகாஷ் சிறுத்தைப் புலியை மருத்துவ பரிசோதனை செய்து வருகிறார். மேலும் வனத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...