வாளையார் அருகே ரயில் பாதையை சுத்தப்படுத்திய தன்னார்வலர்கள்

இந்திய சுற்றுச்சூழல் அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் மற்றும் எல் & டி ஊழியர்கள் இணைந்து இன்று மதுக்கரையை அடுத்த சோளக்கரை பகுதியில் ரயில் பாதையை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

கோவை : இந்திய சுற்றுச்சூழல் அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் மற்றும் எல் & டி ஊழியர்கள் இணைந்து இன்று மதுக்கரையை அடுத்த சோளக்கரை பகுதியில் ரயில் பாதையை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். 



கோவை சோளக்கரை பகுதியில் உள்ள வனப்பகுதிக்குள் செல்லும் ரயில் பாதைகளில் அதிக குப்பைகள் சேர்வதாக வந்த தகவலையடுத்து இந்திய சுற்றுச்சூழல் அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் மற்றும் எல் & டி ஊழியர்கள் வனத்துறையுடன் இணைந்து இன்று அப்பகுதியில் தூய்மைப் பணியை மேற்கொண்டனர். 

60-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு வனப்பகுதியை சுத்தம் செய்ய வேண்டிய அவசியமும், பிளாஸ்டிக் மற்றும் உடைந்த கண்ணாடி துண்டுகளால் வன உயிரினங்களுக்கு ஏற்படும் தீங்கைப் பற்றியும் வனத்துறையினர் விவரித்தனர். 

இது தொடர்பாக ஒருங்கிணைப்பாளர் சஞ்சய் பிரசாத் கூறுகையில், " நகர்ப்புற மக்களின் அறியாமை வன உயிரினங்களுக்குத் தீங்காக அமையும். இந்த வனப்பகுதி வழியாகச் செல்லும் ரயில்களில் பயணிக்கும் பயணிகள் பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி துண்டுகள் வீசிவிட்டு செல்கின்றனர். இது வன உயிரினங்களைப் பாதிக்கிறது. ரயில்வே பாதையை தூய்மைப்படுத்துவதும். காடுகளை பாதுகாப்பதுவும் அத்தியாவசியமான ஒன்றாகும்." என்றார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...