உதகையில் உலா வரும் கரடி - அச்சத்தில் மக்கள்

உதகையை அடுத்த மசினகுடி குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடியை பிடிக்க வனத்துறையினர் தாமதம் செய்து வரும் நிலையில் மீண்டும் இன்று அதிகாலை மீண்டும் கரடி பேரூந்து நிலையம், காவல் நிலையம் பகுதியில் உலா வருவதால் மக்கள் அச்சம்.


நீலகிரி: உதகையை அடுத்த மசினகுடி குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடியை பிடிக்க வனத்துறையினர் தாமதம் செய்து வரும் நிலையில் மீண்டும் இன்று அதிகாலை மீண்டும் கரடி பேரூந்து நிலையம், காவல் நிலையம் பகுதியில் உலா வருவதால் மக்கள் அச்சம்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள மசினகுடி பஜார் பேரூந்து நிலையம் பகுதியில் ஆண் கரடி ஒன்று இரவு 7 மணிக்கு மேல் உலா வருகிறது. கடந்த 6 நாட்களுக்கு முன்பு மசினகுடி காவல் நிலையத்தில் புகுந்த கரடி, நேற்று முன் தினம் இரவு நெடுஞ்சாலை தங்கும் விடுதியில் புகுந்தது. அத்துடன் அங்குள்ள ஒரு வீட்டின் கூரையை பிரித்து உள்ளே நுழைய முயன்றது. 

மேலும் ஒருவர் கடையில் பொருட்களை வாங்கி கொண்டு சென்ற போது அவரை துரத்தியுள்ளது. இந்த கரடி இன்று அதிகாலை மசினகுடி பேரூந்து நிலையம் வழியாக மீண்டும் காவல் நிலையம் பகுதிக்கு சென்றது. இந்த காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ள நிலையில் வனத்துறையினர் இந்த கரடியை கூண்டு வைத்து பிடிக்க தாமதம் செய்து வருவதால் மக்களை இந்த கரடி தாக்கும் அபாயம் உள்ளது. ஒரு மாத காலமாக குடியிருப்பு, காவல் நிலையம், மாநில நெடுஞ்சாலை தங்கும் விடுதி ஆகிய பகுதிகளில் உலா வருவதால் இரவு 9 மணிக்கு மேல் யாரும் வராமல் பயப்படும் நிலை ஏற்ப்பட்டுள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...