கோவை ரயில் நிலையத்தில் மல்டிலெவல் பார்க்கிங்: பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

கோவை ரயில் நிலையத்தில் அமைக்கப்பட உள்ள மல்டிலெவல் பார்க்கிங் பணிகளை விரைவில் தொடங்குமாறு ரயில்நிலைய அதிகாரிகளுக்கு தெற்கு ரயில்வே கூடுதல் பொதுமேலாளர் உத்தரவிட்டார்.


கோவை: கோவை ரயில் நிலையத்தில் அமைக்கப்பட உள்ள மல்டிலெவல் பார்க்கிங் பணிகளை விரைவில் தொடங்குமாறு ரயில்நிலைய அதிகாரிகளுக்கு தெற்கு ரயில்வே கூடுதல் பொதுமேலாளர் உத்தரவிட்டார்.

தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் மிஸ்ரா நேற்று காலை கோவை ரயில் நிலையத்திற்கு ஆய்வுக்காக வந்தார். அவரை கோவை ரயில் நிலைய அதிகாரிகள் வரவேற்றனர்.

அதன்  பின்பு மல்டிலெவல் டூவிலர் பார்க்கிங் அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்து, பணிகளை விரைவில் துவக்குமாறு அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, பார்சல் ஆபிஸ், லிப்ட் அமைக்கும் பணிகள் ஆகியவற்றை பார்வையிட்டார். எஸ்கிலேட்டர் செயல்பாடு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், ரயில் நிலையத்தின் முகப்பில் அமைக்கப்பட்டு வரும் நிழற்குடை அமைக்கும் பணிகளை பார்வையிட்டார்.

மேலும் ரயில் நிலையத்திற்கு காரில் வருபவர்களுக்கு தனி வழி அமைக்கும் பணி, பிளாட்பார்ம் 1 ஏ-யின் காம்பவுண்ட் சுவரில் பெயிண்ட் அடித்து அழகுப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கோவை ரயில் நிலையத்தில் நடக்கும் பணிகளை சுமார் 1 மணி நேரம் தெற்கு ரயில்வே கூடுதல் பொதுமேலாளர் மிஸ்ரா பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது, சேலம் ரயில்வே கோட்ட பொதுமேலாளர் ஹரிசங்கர் வர்மா, கோவை ரயில் நிலைய இயக்குநர் சதிஷ் சரவணன் உட்பட பலர் உடனிருந்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...