உதகை மத்திய பேருந்து நிலையத்தை நவீனமயமாவது எப்போது? : பொதுமக்கள் கேள்வி

உதகை மத்திய பேருந்து நிலையத்தை நவீன பேருந்து நிலையமாக மாற்றுவதற்கான பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று அம்மாவட்ட மக்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.

நீலகிரி: உதகை மத்திய பேருந்து நிலையத்தை நவீன பேருந்து நிலையமாக மாற்றுவதற்கான பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று அம்மாவட்ட மக்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.

சுற்றுலா நகரம் என்றழைக்கப்படும் உதகைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சமவெளி பிரதேசங்களில் இருந்து வரும் நடுத்தர மக்கள் உதகைக்கு சுற்றுலா வருவதற்கு அரசு பேருந்துகளில் உபயோகித்து வருகின்றனர்.

மேலும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மக்கள் சமவெளி பிரதேசங்களுக்குச் செல்ல அரசு பேருந்துகளையே நம்பியுள்ளனர். இதனால் உதகை மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் நாள்தோறும் அதிகரித்தே காணப்படுகிறது.

இந்நிலையில் உதகை மத்திய பேருந்து நிலையம் போதிய பராமரிப்பு இல்லாததால் பேருந்து நிலையத்திற்குள் இருக்கும் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மழைக் காலங்களில் மழை நீர் சூழ்ந்தும், சேறும், சகதியுமாக இருப்பதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த பேருந்து நிலையத்தை சீரமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற 121-வது மலர் கண்காட்சியை துவக்கி வைத்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, உதகை மத்திய பேரூந்து நிலையத்தை ரூ.2 கோடி மதிப்பில் நவீன பேருந்து நிலையமாக மாற்றப்படும் என வாக்குறுதியளித்தார்.

இந்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று நீலகிரி மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...