தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெண்கள் இருவர் பலி

திருப்பூர் மாவட்டம் கொடுவாய் அருகே தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் கொடுவாய் அருகே தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சத்தியமங்கலம் பகுதியில் இருந்து தாராபுரம் நோக்கி தனியாருக்குச் சொந்தமான பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து திருப்பூர் மாவட்டம் கொடுவாய் அருகே வந்த போது ஒட்டன்சத்திரத்திலிருந்து திருப்பூர் நோக்கி வந்து  கொண்டிருந்த  தனியார் பேருந்துடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.



இது தொடர்பாக, அப்பகுதி மக்கள் ஊதியூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



தனியார் பேருந்துகள் இரண்டும் அதி வேகமாக பயணித்ததே இந்த விபத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இதனிடையே விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் பேருந்து ஓட்டுநர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...